/* */

ஜேடர்பாளையம்: குடிபோதையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு

ஜேடர்பாளையம் அருகே குடிபோதையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

ஜேடர்பாளையம்: குடிபோதையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
X

நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள சின்னமருதூரை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் பாபு (வயது33). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2-ந் தேதி சின்னமருதூரில், ரோட்டோரம் இருந்த ஒரு பாலத்தில் மது குடித்து விட்டு அமர்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக பாலத்தின் பின்னால் இருந்த பள்ளத்தில் விழுந்தார். இதில் அவருக்கு தலை மற்றும் கழுத்து பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, பாபு நேற்று இறந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 19 Jun 2022 4:23 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    சோழவந்தான் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர பொதுமக்கள்
  2. திருமங்கலம்
    சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு...
  3. ஆவடி
    ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  5. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  6. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  8. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  10. ஈரோடு
    ஈரோடு கருங்கல்பாளையத்தில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்கும்...