/* */

பென்சன்தாரர் உயிரிழந்தால், வங்கி கணக்கில் மற்றவர்கள் பணம் எடுப்பது குற்றம்

பென்சன் பெறுவோர் உயிரிழந்தால், அவரது வங்கி கணக்கில் இருந்து மற்றவர்கள் பணம் எடுப்பது குற்றம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

பென்சன்தாரர் உயிரிழந்தால், வங்கி கணக்கில்  மற்றவர்கள் பணம் எடுப்பது குற்றம்
X

ஸ்ரேயாசிங், நாமக்கல் கலெக்டர்.

நாமக்கல் மாவட்டத்தில், பென்சன் பெறுவோர் உயிரிழந்தால், அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பது குற்றம் என்று மாவட்டட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் உளள மாவட்டக் கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் மூலம் பென்சன் பெறும் ஓய்வுபெற்றோர், கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2020-21 ஆம் ஆண்டிற்கான நேர்காணல் மற்றும் ஆயுள்சான்று சமர்ப்பிப்பதில் இருந்து தற்காலிகமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பென்சன் மற்றும் குடும்ப பென்சன் பெறுபவர்கள் எதிர்பாராதவிதமாக இயற்கை எய்தினால் அவர்களுடைய வாரிசுதாரர்கள் உடனடியாக சம்மந்தப்பட்ட மாவட்ட அல்லது சார்நிலை கருவூலகங்களுக்கு இறப்பு தகவலைத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் அளிக்காமல் பென்சனர்களின் வங்கி ஏடிஎம் கார்டை பயன்படுத்தி முறைகேடாக பணம் எடுப்பது சட்டப்படி குற்றமாகும். எனவே ஓய்வூதியர் இறப்பு தொடர்பான தகவலை அருகில் உள்ள மாவட்ட அல்லது சார்நிலைக் கருவூலங்களில் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

Updated On: 19 Aug 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  2. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  3. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  4. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  5. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
  6. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  8. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  9. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்