/* */

நாமக்கல்: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்பப்பெற கடைசி வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில், ஆர்டிஓ அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்பப்பெற கடைசி வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்: பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்பப்பெற கடைசி வாய்ப்பு
X

கோப்பு படம் 

இது குறித்து, நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவக ஆர்டிஓ முருகேசன் தெரிவித்துள்ளதாவது: நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு, உட்பட்ட பகுதி மற்றும் ராசிபுரம் பகுதியில் பல்வேறு குற்றங்கள் மற்றும் குறைபாடுகளுக்காக சிறைபிடிக்கப்பட்ட, டூ வீலர்கள், 3 வீலர்கள், 4 வீலர்கள், கார்கள், லாரிகள் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் பல ஆண்டுகளாக உரிமை கோரப்படாமல் ஆர்டிஓ அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வாகன விபரங்கள் அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. அந்த வாகனங்களை ஏலத்தில் விட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் ,வாகனம் தொடர்பான ஆவணங்களை அலுவலகத்தில் காட்டி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம். வரும் 15 நாட்களுக்குள் உரிய அபராதம் செலுத்தி வாகனங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் உரிமை கோரப்படாத வாகனங்கள் என கருதி அந்த வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டு அந்த பணம் அரசு கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Updated On: 27 Jan 2022 10:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  2. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!
  3. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்
  4. திருமங்கலம்
    மீனாட்சி திருக்கல்யாணம் என்பது தெய்வத் திருமணம்!
  5. அரசியல்
    மோடியை பார்த்து எதிர்க்கட்சிகள் கலங்குவதன் காரணம் என்ன?
  6. பொன்னேரி
    ஜிஎப்சி குலோபல் பப்ளிக் பள்ளியில் விளையாட்டு போட்டி!
  7. திருப்பரங்குன்றம்
    கோயில்களில், இன்று மாலை சங்கடஹரசதுர்த்தி விழா!
  8. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  9. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  10. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!