/* */

மோகனூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

மோகனூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவப் பரிசோதனை மற்றும் அளவீடு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மோகனூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
X

மோகனூரில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், மோகனூரில் ஊராட்சியம், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட, வட்டார வளமையம் சார்பில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம், மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட சிஇஓ மகேஸ்வரி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள் புகழேந்தி, மகேஷ்குமார், மோகனூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மோகனூர் வட்டார கல்வி அலுவலர் இளங்கோ, வினோத்குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் பேசினார்கள். வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாலுசாமி வரவேற்றார். டாக்டர்கள் முகிலாஸ்ரீ, இந்துமதி, லீலாதரன், சவுமியா, மதிவதனி, செவித்திறன் பரிசோதகர் வனிதாலட்சுமி, கண் பரிசோதகர் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, பிறந்தது முதல் 18வயது வரையிலான மாற்றுத்திறன் குழந்தைகளை பரிசோதனை செய்து அளவீடு செய்தனர். முகாமில் 110 மாற்றுத்திறன் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 29 March 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?