/* */

பவானி அருகே கோவில் நிலங்கள் ரோவர் கருவி மூலம் அளவீடு

பவானி அருகே, ஜம்பை பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், நவீன ரோவர் கருவி மூலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்றது.

HIGHLIGHTS

பவானி அருகே ஜம்பை பத்ரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், சுற்றுவட்டார கிராமப்பகுதியில் 30 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதனை குத்தகைக்கு எடுத்தவர்கள் நெல், கரும்பு உள்ளிட்ட பயிர் வகைகளை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலங்களில் குத்தகைதாரர்கள் பாதை அமைத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் கோயில் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டது.

கோவில் செயல் அலுவலர் அன்புதேவி, அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் சரவணன், கோபி காளியம்மன் கோவில் செயல் அலுவலர் சுகுமார், பவானி ஆய்வாளர் நித்யா, அறநிலையத்துறை தாசில்தார் பழனிச்சாமி, வி.ஏ.ஒ. ஆனந்தன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

இதை தொடர்ந்து, எல்லையில் கற்கள் நடப்பட்டதோடு குத்தகை விதிகளுக்கு புறம்பாக பாதை அமைத்த குத்தகைதாரரின் உரிமம் ரத்து செய்யவும் உரிய அறிவிப்பு வழங்கப்பட்டது.

Updated On: 5 Oct 2021 11:23 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு