/* */

குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மது விற்பனை செய்த 3 பேர் கைது

குமாரபாளையத்தில், சட்டவிரோதமாக அதிக விலைக்கு மது விற்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் அதிக விலைக்கு மது விற்பனை செய்த 3 பேர் கைது
X

குமாரபாளையம் காவல் நிலையம் (கோப்பு படம்)

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில், அதிக விலைக்கு மது விற்பதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், குமாரபாளையம் காவல் நிலைய ஆய்வாளர் ரவி தலைமையில், எஸ்.ஐ.-க்கள் மலர்விழி, முருகேசன், சேகரன் உள்ளிட்ட போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதில், குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் எதிரில், கத்தாளபேட்டை காமாட்சி அம்மன் கோவில் அருகில், அதே பகுதியை சேர்ந்த ஐயப்பன், 55, குப்பாண்டபாளையம் பள்ளர் தெருவில் கிருஷ்ணன், 40, சத்யா நகரில் பொன்சீனி, 46, ஆகியோர் மது விற்றுக் கொண்டிருந்தனர். அதிக போதை வர, ஊமத்தம் இலை சாற்றையும் கலந்திருந்தனர். இவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார் , அவர்களிடம் இருந்து 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 13 Nov 2021 11:33 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  2. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  3. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  4. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  7. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  8. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  10. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...