/* */

மதுரை மத்திய சிறையில் போலீஸார் திடீர் சோதனை.. கஞ்சா, பீடி கட்டுகள் பறிமுதல்...

மதுரை மத்திய சிறையில் போலீஸார் திடீரென மேற்கொண்ட சோதனையின்போது செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செயய்ப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

மதுரை மத்திய சிறையில் போலீஸார் திடீர் சோதனை.. கஞ்சா, பீடி கட்டுகள் பறிமுதல்...
X

மதுரை மத்திய சிறைச்சாலை. (கோப்பு படம்).

தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள சிறைவாசிகளிடம் செல்போன் புழக்கம் இருப்பதாகவும், சிறைக்குள் தடை செய்யப்பட்ட பீடி, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டம் இருப்பதாகவும் புகார் எழுந்தன. இதனால், சிறைச்சாலைகளில் போலீஸார் அவ்வப்போது அதிரடி சோதனை மேற்கொண்டு செல்போன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்வது வழக்கம்.

இதேபோல, மதுரை மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உள்ளனர். இந்தநிலையில், கைதிகளிடம் செல்போன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பழக்கம் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, மதுரை மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி, போலீஸார் இன்று திடீரென மதுரை மத்திய சிறைக்குள் குழுவாக சென்று திடீரென பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.

மூன்று போலீஸ் உதவி கமிஷனர் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தனித்தனி குழுவாக பிரிந்து சென்று ஒவ்வொரு அறைகளில் உள்ள கைதிகளிடம் மற்றும் கைதிகளின் அறைகளில் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், அங்குள்ள சமையல் அறை, குளியல் அறை உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தினர் வ சில கைதிகள் மறைத்து வைத்திருந்த கஞ்சா, பீடி உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதேபோன்று ,பெண் கைதிகளின் அறைகளிலும் சோதனை நடைபெற்றது. நேற்று தண்டனை கைதிகள் சிலர் கஞ்சா பொட்டலங்களை மறைத்து சிறைக்குள் கொண்டுவந்ததாக புகார் எழுந்தது. அதன் தொடர்ச்சியாக அதிரடி சோதனை நடைபெற்றது என போலீஸார் தெரிவித்தனர்.

சிறைக்குள் தடை செய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதேபோன்று, அடிக்கடி எதிர்பாராத நேரத்தில் திடீரென சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.

Updated On: 2 Jan 2023 5:22 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு