/* */

அந்தியூர் தாலுகாவில் நடைபெற்ற ஜமாபந்தியில் 160 மனுக்கள் அளிப்பு

அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஜமாபந்தியில் 160 மனுக்களை அதிகாரிகளிடம் பொதுமக்கள் அளித்தனர்.

HIGHLIGHTS

அந்தியூர் தாலுகாவில் நடைபெற்ற ஜமாபந்தியில் 160 மனுக்கள் அளிப்பு
X

ஜமாபந்தியில் மனுக்களை பெற்றுக்கொண்ட அதிகாரிகள்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகாவில் உள்ள அம்மாபேட்டை உள்வட்டத்தில், அம்மாபேட்டை, கன்னப்பள்ளி , இலிப்புலி , சென்னம்பட்டி , கொமராயனூர், புதூர் , மாத்தூர் , வெள்ளித்திருப்பூர் , நெரிஞ்சிப்பேட்டை , ஆரியகவுண்டனூர் ஆகிய கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் எனும் ஜமாபந்தி நடைபெற்றது.‌

தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மாவட்ட மேலாளர் ஆ.தியாகராஜன் தலைமையில் நடந்த ஜமாபந்தியில், அம்மாபேட்டை தர்காவுக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து 160 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

மொத்தம் நான்கு நாட்கள் நடைபெற உள்ள ஜமாபந்தியில் நாளை அந்தியூர் உள் வட்டத்திற்கும் நாளை மறுநாள் பர்கூர் உள்வட்டத்திற்கும் 27ம் தேதி அத்தாணி உள் வட்டத்திற்கும் வருவாய் தீர்வாயம் நடைபெற உள்ளது.ஜமாபந்தி நிகழ்ச்சியில் அந்தியூர் தாசில்தார் விஜயகுமார் , துணை தாசில்தார் நல்லசாமி, அந்தியூர் வருவாய் ஆய்வாளர் சுதாகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 24 May 2022 7:00 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  3. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  4. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  8. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  9. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை