/* */

செவ்வாய்க்கிழமை முதல் பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கப்படும்: கலெக்டர்

ஈரோடு மாவட்டத்தில் 7.41 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கப்படவுள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்‌.

HIGHLIGHTS

செவ்வாய்க்கிழமை முதல் பொங்கல் பரிசுப்பொருட்கள் வழங்கப்படும்: கலெக்டர்
X

பைல் படம்.

தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, வெல்லம் உள்பட 21 பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. பொங்கல் தொகுப்புகள் மஞ்சப்பைகளில் வைத்து வழங்க அரசு திட்டமிட்டு உள்ளது. இதில் 2 கோடிக்கும் மேற்பட்ட அட்டை தாரர்களுக்கு ஜனவரி 3-ந் தேதி முதல் பொங்கல் தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளது.

இதையொட்டி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7 லட்சத்து 39 ஆயிரத்து 771 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் குடும்ப அட்டைகள் ஆயிரத்து 382 என மொத்தம் 7 லட்சத்து 41 ஆயிரத்து 153 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி, 21 பொருட்கள் கொண்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன. இந்த பொங்கல் பரிசு தொகுப்புபினை வரும் ஜன.4ம் தேதி முதல் ஜன.31ம் தேதி வரை வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்கள் தொடர்புடைய நியாய விலை கடைகளுக்கு சென்று கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்துள்ளார்.

Updated On: 1 Jan 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு