/* */

கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை

கொங்கர்பாளையத்தில், திருமணத்திற்கு சென்ற போது, வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். அரிசி ஆலை அதிபர். நேற்று முன்தினம், இவரது மகள் கிருத்திகாவின் திருமணம் சத்தியமங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு, ஜெயக்குமார், மனைவி கவிதா மற்றும் மகன் சந்தோஷ் ஆகியோர் குடும்பத்துடன், வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளனர்.

பின்னர், திருமணம் முடிந்து நேற்று மாலை வீடு திரும்பிய போது, படுக்கையறை கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 25 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து, பங்களாப்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் போலீசார் மோப்பநாய், கைரேகை தடவியல் நிபுணர்கள் மற்றும் சிசிடிவி கேமராவின் மூலம் கொள்ளையடித்த மர்ம நபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Updated On: 7 March 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  4. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  8. ஆன்மீகம்
    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடக்கம்! என்ன செய்யலாம்? எதை...
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  10. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...