/* */

3 அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர்

அந்தியூரில் அதிமுகவைச் சேர்ந்த மூன்று முன்னாள் கவுன்சிலர்கள் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

HIGHLIGHTS

3 அதிமுக கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர்
X

திமுகவில் இணைந்த அதிமுகவினர் உடன் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்எல்ஏ.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சியில் கவுன்சிலராக இருந்தவர்கள் பிரகாஷ், ராஜா (இருவரும் 7 வது வார்டு) மற்றும் மகாலிங்கம் (6வது வார்டு) மூன்று பேரும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். இந்நிலையில் இந்த மூன்று பேரும் தங்களை அதிமுகவிலிருந்து விலகி அந்தியூர் திமுக எம்எல்ஏ ஏ.ஜி‌.வெங்கடாசலம் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். திமுகவில் இணைந்த 3 முன்னால் கவுன்சிலர்களை கட்சி எம்எல்ஏ வரவேற்றார். தொடர்ந்து மக்களுக்காக உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதில் பிரகாஷ் அதிமுகவில் சீட் கிடைக்காததால், 7வது வார்டில் தற்போது சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தார். திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டதன் காரணமாக வேட்புமனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு திமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார்.

Updated On: 8 Feb 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு