/* */

விவசாயிகளுக்கான சிறப்பு கடன் திட்ட முகாம்

இம்முகாமில், 8.76 கோடி ரூபாய் மதிப்பில், 2,923 கடன் விண்ணப்பம் பெறப்பட்டது. தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு விரைவில் கடன் அட்டை வழங்க உள்ளனர்.

HIGHLIGHTS

விவசாயிகளுக்கான சிறப்பு கடன் திட்ட முகாம்
X

ஈரோடு மாவட்டம் அரச்சலுாரில், கனரா வங்கி சார்பில், ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகளுக்கான சிறப்பு கடன் திட்ட முகாம் நடந்தது. சென்னை கோட்ட அலுவலக துணை பொது மேலாளர் சண்முகம் தலைமை வகித்து, பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் திட்டம் பற்றி பேசினார்.

ஈரோடு மண்டல உதவி பொது மேலாளர் ஜனார்த்தனராவ் முன்னிலை வகித்தார். 700க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். விவசாய கடன் திட்டம், கால்நடை அபிவிருத்தி கடன் திட்டம், வாகன கடன், அடமான கடன், தொழில் கடன்களின் முன்னுரிமை போன்றவை குறித்து விளக்கப்பட்டது.

இம்முகாமில், 8.76 கோடி ரூபாய் மதிப்பில், 2,923 கடன் விண்ணப்பம் பெறப்பட்டது. தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு விரைவில் கடன் அட்டை வழங்க உள்ளனர். ஈரோடு மண்டல அலுவலக கோட்ட மேலாளர் மீனாட்சி, முதுநிலை மேலாளர் மோகனாம்பாள் உட்பட பலர் பங்கேற்றனர்.இதே போன்ற முகாம், தாமரைபாளையம், நசியனுார், அந்தியூர் உட்பட பல்வேறு இடங்களில் நடந்தது.

Updated On: 21 Jan 2021 1:08 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!