/* */

ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்

சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தர்மபுரி அருகே ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.

HIGHLIGHTS

ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்
X

ஆட்சியர் அலுவலகம் முன் குடும்பத்துடன் போராட்டம் நடத்திய பெண் 

தர்மபுரி மாவட்டம் செட்டிக்கரை அருகேயுள்ள பள்ளக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மனைவி சரோஜா. இவர் தனது குடும்பத்தினருடன் இன்று காலை 11 மணியளவில் தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.

அப்போது திடீரென்று ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தனது குடும்பத்தினருடன் போராட்டத்தில் ஈடுப்பட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர்அவர்களிடம் விசாரித்தனர்.

அப்போது சரோஜா மற்றும் அவரது குடும்பத்தினர் கூறுகையில், தர்மபுரி மாவட்டம் விருப்பாட்சிபுரம் அருகேயுள்ள கோடிகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் எனது தந்தை பெருமாள். என்னை பள்ளக் கொல்லையைச் சேர்ந்த சின்னசாமி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். என் தந்தைக்கு 3 மகன்களும் 2 மகள்களும் வாரிசுதாரர்கள். இதில் தந்தை பெருமாள், தாய் ராஜம்மாள், அண்ணன் பச்சியப்பன் மற்றும் அக்கா ராணி ஆகியோர் இறந்து விட்டனர்.

இந்நிலையில் குடு்ம்ப சொத்தை அபகரிக்க வேண்டும் என்று ஆசை கொண்ட எனது தம்பிகள் மாதையன், மாரிமுத்து, மற்றும் அண்ணன் குடும்பத்தை சேர்ந்தவர்கள் போலியாக வாரிசு சான்று தயாரித்து தந்தை பெயரில் உள்ள குடும்ப சொத்தை 5 பத்திரங்களாக பதிவு செய்து உள்ளனர்.

என்னையும், இறந்து போன தனது அக்கா ராணியை தவிர்த்து விட்டு என் தந்தைக்கு 3 மகன்கள் தான் உள்ளனர் என்று போலியாக வாரிசு சான்று பெற்று உள்ளனர். அதன் மூலம் எங்களது சொத்துகளை விற்றுவிட்டனர்.

ஆகவே போலியான சான்று மூலம் குடும்ப சொத்தை அபகரித்து இருக்கும் எனது தம்பிகள் மற்றும் அண்ணன் குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வட்டாட்சியார் மற்றும் அதிகாரிகளிடம் பலமுறை புகார் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, போலி வாரிசு சான்று மூலம் சொத்தை அபகரித்த சகோதரர்கள், அண்ணன் குடும்பத்தினர், போலி வாரிசு சான்று வழங்கிய அதிகாரிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்.

இது குறித்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களை ஆட்சியரிடம் மனு கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.

அதன்பின்னர் சரோஜா தனது குடும்பத்தினருடன் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 9 Dec 2023 2:52 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  4. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  5. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  6. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  7. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  8. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  10. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...