Begin typing your search above and press return to search.
பொம்மிடி மின்வாரிய அலுவலகத்தில் கம்பிகள் திருட்டு: போலீசார் விசாரணை
பொம்மிடி மின்வாரிய அலுவலகத்தில் மின் கம்பிகளை திருடிய மர்ம நபரை போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS
தர்மபுரி மாவட்டம், பொம்மிடி நகர மின்வாரிய பிரிவு அலுவலகம் பி.துரிஞ்சிப்பட்டியில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் உள்ள கம்பி வேலியின் உட்புறமாக பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த மின்சார வாரியத்திற்கு சொந்தமான ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள மின் கம்பிகள் திருட்டு போனது தெரியவந்தது.
இது குறித்து பொம்மி டி மின்வாரிய உதவி பொறியாளர் பிரதீப் பொம்மிடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.