Begin typing your search above and press return to search.
அரூர் அருகே வாய்த்தகராறில் காணாமல்போன கணவரைத் தேடும் மனைவி
அரூர் அருகே வாய்த்தகராறில் காணாமல்போன கணவரைத் தேடும் மனைவி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
HIGHLIGHTS
அரூர் அருகே உள்ள கம்பைநல்லூர் அடுத்த சின்னாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் கமலேசன் வயது 58,விவசாயி. இவரது மனைவி சாரதி வயது 47, கடந்த 10-ந் தேதி புதன் கிழமை தனது கணவரிடம் மாட்டை ஏன் மேய்ச்சலுக்கு கட்டவில்லை என சாரதி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
பின்னர் அரூரில் உள்ள தாலுகா அலுவலகத்திற்கு செல்வதாக கூறிச் சென்ற கணவர் கமலேசன் வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.
எனவே தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு சாரதி வயது 47 என்பவர் கம்பைநல்லூர் போலீசில் செய்தார். அதன் பேரில் கமபைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கமலேசனை தேடி வருகிறார்கள்.