/* */

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

Former CM Jayalalitha Birth Day காரியாபட்டியில் அதிமுக சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவையொட்டி பொதுமக்களுக்க அன்னதானம் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில்  ஜெயலலிதா பிறந்தநாள்  விழா
X

காரியாபட்டியில்ஜெயலலிதா பிறந்தநாள் விழாவையொட்டி  பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிர்வாகிகள்.

Former CM Jayalalitha Birth Day

தமிழகத்தில் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு அதிமுவைக் கட்டிக் காத்து ஆட்சியிலும் அமர வைத்த பெருமை முன்னாள் முதல்வரான ஜெயலலிதாவைச் சாரும். அந்த வகையில் கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் நடந்த சட்டசபைத் தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியில் அமர வைத்தார். பின் 2016 ம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார். அவருடைய பிறந்த நாள் மாநிலம் முழுவதும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி. மேற்கு, கிழக்கு மேற்கு ஒன்றிய கழக அதிமுக சார்பாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர்கள் ராமமூர்த்தி ராஜ், தோப்பூர் முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ. கே.கே. சிவசாமி, மாவட்ட கழக அவைத் தலைவர் ஜெய பெருமாள், பொதுக் குழு உறுப்பினர். ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பேருந்து நிலையம் முன்பு வைக்கப் பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

நகரச் செயலாளர் விஜயன், நகர துணைச் செயலாளர் வெங்கட் ராமன், ஊராட்சி மன்றத் தலைவர் ஆவியூர் ரவி, வழக்கறிஞர் அணி செயலாளர் ரமேஷ், ஒன்றிய துணைச் செயலாளர் பாலசுப்பிர மணியம், பிரதிநிதி பழனியப்பன், தோப்பூர் ரகு, உட்பட பலர் பங்கேற்றனர்.

Updated On: 25 Feb 2024 9:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  3. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  5. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  7. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  8. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே லாரி டிரைவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த தம்பி
  10. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!