/* */

அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயார்: முன்னாள் அமைச்சர் பேச்சு

திமுக கட்சிக்கு வாக்களித்த மக்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி

HIGHLIGHTS

அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயார்: முன்னாள் அமைச்சர் பேச்சு
X

 சிவகாசியில் மேற்கு மாவட்ட அதிமுக கட்சி சார்பில் முன்னாள் முதல்வர்  அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா  பொதுக்கூட்டத்தில் பேசிய, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசும்போது,

திமுக கட்சிக்கு வாக்களித்ததை எண்ணி மக்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர். எப்போது, எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக கட்சிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசினார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மேற்கு மாவட்ட அதிமுக கட்சி சார்பில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று, முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசும்போது,

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை திமுக கட்சியினர் பயந்து நடுங்கிக் கொண்டு பதுங்கி இருந்தனர். அவர் இறந்த பின்பு பயம் இல்லாமல், தொடர்ந்து தவறுகளை செய்து கொண்டுள்ளனர். விடியல் தரப் போகிறோம் என்று பாட்டு பாடி ஆட்சிக்கு வந்த திமுக, இது வரை தமிழக மக்களுக்கு விடியலை தரவில்லை. திமுக அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் நின்றால் வரி, நடந்தால் வரி, அமர்ந்தால் வரி என்று, வரிக்கு மேல் வரியாக போட்டு மக்களை பாடாய் படுத்தி வருகிறது.

துன்பம் அதிகமாகி, டாஸ்மாக் மதுக் கடைக்கு சென்று மது குடித்தால் போதை கூட ஏறவில்லை. காரணம் அங்கு விற்கப்படுவது அமைச்சர் ஒருவரின் போலி சரக்கு. முதல்வர் ஸ்டாலின் தினமும் ஒரு திட்டம் அறிவித்து, போட்டோ ஷுட் மட்டும் நடத்தி வருகிறார். எந்த திட்டமும் உருப்படியாக செயல்பாட்டிற்கு வரவில்லை. சிவகாசியின் பிரதான தொழிலாக இருக்கும் பட்டாசு ஆலைகளில் திமுக அரசு தொடர்ந்து சோதனைகள் நடத்தி, பட்டாசு தொழிலை முடக்கி வருகிறது. பட்டாசு தொழில் செய்பவர்கள் கள்ள மது விற்பவர்கள் போலவும், ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்கள் போலவும் ஓடி, ஔிந்து கொண்டு இருக்கின்றனர். திமுக ஆட்சியில் தமிழ மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களை பார்க்கவே முடிவதில்லை.

முதலமைச்சர் ஸ்டாலினை சுற்றி 5 பேர் கொண்ட வளையம் இருக்கின்றது. அதனை தாண்டி முதல்வரை மக்கள் அணுக முடியாத நிலை உள்ளது. இந்தியா முழுவதும் ஒரே தேர்தல் என்று டாடி மோடி சொல்லிக் கொண்டிருக்கிறார். அடுத்து நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலானாலும், அல்லது நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து சட்டமன்ற தேர்தல் நடந்தாலும் ஏதோ ஒன்று நடக்கப் போகின்றது. திமுக கட்சிக்கு வாக்களித்த மக்கள் மிகவும் வருத்தத்தில் உள்ள நிலையில் எப்போது, எந்த தேர்தல் வந்தாலும் அதிமுக கட்சிக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். கூட்டத்தில் நடிகை விந்தியா, முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Sep 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  4. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  5. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  6. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  7. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  8. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  9. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!