Begin typing your search above and press return to search.
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஒருவர் உயிரிழப்பு
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்-ஜமீன்சல்வார்பட்டி என்ற ஊரில் பட்டாசு ஆலையில் விபத்து நிகழ்ந்துள்ளது.
HIGHLIGHTS
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். ஜமீன்சல்வார்பட்டி என்ற ஊரில் பட்டாசு ஆலையில் விபத்து நிகழ்ந்துள்ளது.வெடி விபத்தில் ஒரு அறை முற்றிலும் இடிந்து சேதமானதாக தகவல்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஜமீன் சல்வார்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வெடி விபத்தில் ஒரு அறை முழுவதும் இடிந்து தரைமட்டமானது. வெடி விபத்தில் சிக்கியவர் உடல் தூக்கி வீசப்பட்டு மரத்தில் மாட்டிக்கொண்டு்ள்ளது. மரத்தின் மேல் தொங்கிய உடலை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.