/* */

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல்: விருதுநகரில் அமமுகவினர் ஆலோசனை

நகர்புற உள்ளாட்சி தேர்தல்களில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைக்க வேண்டும்

HIGHLIGHTS

நகர்ப்புற  உள்ளாட்சித்தேர்தல்: விருதுநகரில் அமமுகவினர்  ஆலோசனை
X

ராஜபாளைய அருகே சத்திரப்பட்டியில் நடந்த அமமுக ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய மத்திய மாவட்ட செயலாளர் பயில்வான் சந்தோஷ்குமார் 

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக விருதுநகரில் மாவட்ட அமமுகதேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி பகுதியில், விருதுநகர் மத்திய மாவட்ட, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில், நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மத்திய மாவட்ட செயலாளர் பயில்வான் சந்தோஷ்குமார் தலைமை வகித்து நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசியதாவது: நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல்களில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். வெற்றி ஒன்றே நமது இலக்காக இருக்க வேண்டும். மேலும் இந்தப் பகுதியில், 2 ஒன்றிய செயலாளர்களை நியமனம் செய்வதற்கு கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

புதிய ஒன்றிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டவுடன், கட்சி நிர்வாகிகள் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அடுத்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலில், கட்சியின் பொது செயலாளர் டி.டி.வி.தினகரனை முதலமைச்சர் ஆக்குவதற்கு முழுமையாக பாடுபட வேண்டும். விருதுநகர் மத்திய மாவட்ட அனைத்து கிளை பகுதிகளிலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொடிக்கம்பங்கள் அமைத்து, அ.ம.மு.க கொடி ஏற்ற வேண்டும் என்று பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவிதா, மாவட்ட துணைச்செயலாளர் மாரிச்சாமி, சம்சிகாபுரம் கிளைச்செயலாளர் தவம், ஆசிலாபுரம் கிளைச்செயலாளர் கோவிந்தராஜ், ஊராட்சி மன்றத் தலைவர் மாயி, பத்மநாதன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Nov 2021 11:00 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?