Begin typing your search above and press return to search.
காரியாபட்டி பேரூராட்சியில் தீவிர துப்புரவுப் பணி முகாம்
காரியாபட்டியில் சிறப்பு துப்பரவு பணி முகாமை பேரூராட்சி சேர்மன் செந்தில் தொடங்கி வைத்தார்.
HIGHLIGHTS
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சியில் அனைத்து வார்டுகளிலும் மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின் பேரில் துப்பரவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒருங்கிணைந்த சிறப்பு துப்பரவு பணி முகாம் பாண்டியன் நகர் பகுதியில் தொடங்கப்பட்டது. பேரூராட்சித் தலைவர் செந்தில், துப்பரவு பணியினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், செயல் அலுவலர் ரவிக்குமார், பேருராட்சி கவுன்சிலர்கள் சத்தியபாமா, தாமோதரக் கண்ணன், சரஸ்வதி, சங்கரேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.