Begin typing your search above and press return to search.
அருப்புக்கோட்டை அருகே போலி டாக்டர் கைது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செம்பட்டியில் போலி டாக்டர் சண்முகசுந்தரம் கைது செய்யப்பட்டார்.
அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி வெங்கடேஸ்வரன், அலுவலர்கள் நேற்று செம்பட்டி சென்றனர். ஒரு வீட்டில் அருப்புக்கோட்டை சண்முகசுந்தரம் 61, அலோபதி சிகிச்சை அளித்தை கண்டனர். விசாரணையில் அவர் 10 ம் வகுப்பு மட்டும் படித்தவர் என்பது தெரிய வந்தது. அருப்புக்கோட்டை போலீசார் சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.