/* */

விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு தீவிரம்

விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்த கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் பயிர் பாதிப்பு கணக்கெடுப்பு தீவிரம்
X

பைல் படம்.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளநீர் மாவட்டத்தில் குடியிருப்புகளை சூழ்ந்தது மட்டுமின்றி விவசாய விளைநிலங்களையும் மூழ்கடித்தது. அதுமட்டுமின்றி பல ஏரிகள் நிரம்பி அதிலிருந்து வெளியேறிய உபரிநீரும் விவசாய விளைநிலங்களுக்குள் புகுந்தது. இதனால் அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த பல ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் மூழ்கியது.

ஒரு சில நிலங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்களும் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு, கவலையடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நெல் நடவு செய்யப்பட்டிருந்த 18,487 ஹெக்டேர், உளுந்து உள்ளிட்ட சிறுதானியங்கள் பயிர்கள் 61 ஹெக்டேர், பருப்பு வகை பயிர்கள் 1,601 ஹெக்டேர், பருத்தி பயிர்கள் 41 ஹெக்டேர், கரும்பு பயிர் 417 ஹெக்டேர், எள் பயிர் 37 ஹெக்டேர் என மொத்தம் 20,644 ஹெக்டேர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

இது குறித்து சேத விவரங்களை கணக்கிட்டு மதிப்பீடு நிர்ணயிக்கும் பணியில் வருவாய்த்துறையினரும், வேளாண் துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 24 Nov 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  7. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  8. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  9. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  10. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா