Begin typing your search above and press return to search.
திண்டிவனத்தில் வரும் 24 ஆம் தேதி வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்நாள் கூட்டம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் வருகின்ற 24 ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்த்த நாள் கூட்டம் நடைபெறுகிறது
HIGHLIGHTS
திண்டிவனத்தில் வரும் 24- ஆம் தேதி விவசாய குறைதீர் முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 24-ஆம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது என சார் ஆட்சியர் அமித் தகவல் தெரிவித்துள்ளார். திண்டிவனம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் வரும் 24-ஆம் தேதி காலை 11 மணிக்கு திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கிறது. கூட்டத்தில் திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனுார் வட்டத்தில் உள்ள விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.