/* */

செஞ்சி அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

செஞ்சி அருகே கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழப்பு
X

சாலை விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணி நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா கீரம் பாடி பகுதியைச் சேர்ந்தவர் முத்து ராஜேந்திரன் (வயது ௬௦). இவருடைய தந்தை முத்துப்பாண்டியன் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக மதுரையில் இறந்து விட்டார் நேற்று அவருக்கு முப்பதாம் நாள் துக்க நிகழ்ச்சி அனுஷ்டிக்கப்பட்டது,

அந்நிகழ்ச்சியில் முத்து ராஜேந்திரன், அவரது மனைவி சாந்தி, மகன் அழகுவேல் ராஜா மற்றும் மதுரை அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணனின் மனைவி சகுந்தலா தேவி ஆகியோர் பங்கேற்று விட்டு நேற்று இரவு காரில் மதுரையில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் மாவட்டம் வளத்தி - அருள் நாடு கல்லறை அருகே அதிகாலை 3 மணி அளவில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக செஞ்சியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்த லாரி மீது, கார் மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே ராஜேந்திரன் அவருடைய மனைவிசாந்தி மற்றும் அவரது மகன் அழகு ராஜா ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். மேலும் மதுரையைச் சேர்ந்த சகுந்தலா தேவி பலத்த காயம் அடைந்து மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி மருத்துவமனையில் மேல் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தை அறிந்த செஞ்சி டி.எஸ்.பி .பிரியதர்ஷினி தலைமையில் போலீசார் விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிர் இழந்த உடல்களை கைப்பற்றி உடற்கூறுஆய்விற்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக வளத்தி போலீசார் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா கொத்தம் வாடியை சேர்ந்த லாரி டிரைவர் சுந்தர் (வயது 28) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Updated On: 30 Aug 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  2. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  3. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  4. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  7. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  8. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  10. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...