/* */

அனுபவ பாத்தியதை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா

செஞ்சி பேரூராட்சி, தேசூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்

HIGHLIGHTS

அனுபவ பாத்தியதை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா
X

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பட்டா கேட்டு தர்ணாவில் ஈடுபட்டவர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சி, தேசூர்பேட்டை பகுதியில் வசிப்பவர் முனுசாமி, இவர் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து திடீரென தனக்கு நியாயம் வேண்டும் என கோஷங்களை எழுப்பியவாறு அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் செஞ்சி பேரூராட்சி எல்லையில் தேசூர்பேட்டை பகுதியில் அரசு புறம்போக்கில் காலகாலமாக கூரை வீடு கட்டி வசித்து வருவகிறேன், எனக்கு மாற்று இடம் கூட வழங்காமல் அந்த இடத்தில் இருந்து என்னை வெளியேற்றி, அந்த இடத்தை அனுபவ பாத்தியதை இல்லாத ஒரு தனி நபருக்கு வருவாய் துறை பட்டா வழங்கி உள்ளனர். அதனை ரத்து செய்து தனக்கு பட்டா வழங்க வேண்டும் என கூறினார்.

உடனடியாக அங்கு விரைந்து வந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்

Updated On: 13 Sep 2021 2:19 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு