/* */

வந்தவாசியில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

வந்தவாசியில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது, மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

HIGHLIGHTS

வந்தவாசியில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
X

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அருண்குமார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த அலத்துறை கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகன் அருண்குமார் (வயது 25). இவர் மீது கீழ்க்கொடுங்காலூர், வந்தவாசி வடக்கு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தநிலையில் கீழ்கொடுங்காலூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தன்னை போலீசில் காட்டி கொடுப்பதாக நினைத்த அருண்குமார், அவரை கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் அருண்குமாரை கீழ்க்கொடுங்காலூர் போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் பரிந்துரையை ஏற்று அருண்குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவிட்டார். இதையடுத்து வேலூர் மத்திய சிறையில் உள்ள அருண்குமாரிடம் இதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

Updated On: 14 Feb 2022 1:17 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  3. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  4. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  5. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  6. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  7. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  9. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  10. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?