/* */

வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட்டம்

வந்தவாசியில் குப்பைகள் அகற்றப்படாததை கண்டித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட்டம்
X

நகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இதில் 3, 6, 11 மற்றும் 24-வது வார்டுகளில் குப்பைகள் சரிவர அகற்றப்படாததால், பல நாட்களாக குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் நிலவியது.

குப்பைகள் அகற்றப்படாததை கண்டித்து அந்தப் பகுதி பொதுமக்கள் தாங்கள் சேகரித்த குப்பைகளுடன் வந்தவாசி நகராட்சி அலுவலகத்துக்கு வந்து நகராட்சி ஆணையாளர் ராமஜெயம், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் பாண்டி ஆகியோர் முன்னிலையில் நகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில், குப்பைகள் அகற்றப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். நகராட்சி அலுவலகத்தில் குப்பைகளை கொட்டியவுடன் துர்நாற்றம் வீசியதால் பணியாளர்கள் அலுவலகத்தில் இருந்து வெளியேறினர்.

Updated On: 27 Oct 2021 7:32 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!