/* */

வந்தவாசி அருகே ஏரி உடைந்தது

வந்தவாசி அருகே ஏரி உடைந்து, பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கியதால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்

HIGHLIGHTS

வந்தவாசி அருகே ஏரி உடைந்தது
X

ஏரி உடைந்து விவசாய நிலங்களுக்குள் புகுந்த மழை நீர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு திடீரென கனமழை பெய்தது. மழையின் காரணமாக பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது.

இதில் அதிகபட்சமாக வந்தவாசியில் 86 மிமீ மழையளவு பதிவாகியுள்ளது. மற்ற இடங்களில் பதிவாகி உள்ள மழையின் அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு

திருவண்ணாமலை- 52 மிமீ, சேத்துப்பட்டு- 28 மிமீ, செங்கம்- 25.8 மிமீ, கீழ்பெண்ணாத்தூர்- 20.8 மிமீ, கலசப்பாக்கம்- 14 மிமீ, போளூர்- 12.8 மிமீ, ஜமுனாமரத்தூர்- 8 மிமீ, ஆரணி- 7 மிமீ, தண்டராம்பட்டு- 5.6 மிமீ, செய்யாறு- 5 மிமீ, வெம்பாக்கம்- 3 மிமீ.

வந்தவாசியை அடுத்த நல்லூர் பழைய ஏரி, நல்லூர் புதிய ஏரி, கண்டையநல்லூர் ஏரிகள் நிரம்பி வெளியேறும் உபரிநீர் கடுவந்தாங்கல் ஏரிக்கு வரும். இந்த ஏரியின் கரைகள் பலமில்லாத நிலையில் தெற்கு பகுதியில் 2 இடங்களில் கரை உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.

வெறியேறிய நீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்ததில் 300 ஏக்கர் நிஅளவில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு ஆகியவை சேதமாகி உள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தகவல் அறிந்த செய்யாறு கோட்டாட்சியர் விஜயராஜ் நேரில் பார்வையிட்டு உடனடியாக இதற்கான சிறப்பு பொறியாளர் மேற்பார்வையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

Updated On: 2 Dec 2021 1:51 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!