Begin typing your search above and press return to search.
போளூர் வட்டாரத்தில் செப்.26ம் தேதி தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில், வரும் 26ம் தேதி, கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் பேருராட்சியில், வரும் ஞாயிறன்று (26/09/2021) கொரானா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்களை சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
அதன்படி, போளூர் பேருந்து நிலையம், டிஎம் பள்ளி, விவேகானந்தா பள்ளி அருகில், விஎஸ் பிள்ளையார் தெரு, தம்பு தனுசு தெரு, விஆர்எஸ் நகர், அல்லி நகர், பச்சியப்பன் தெரு, இஸ்மாயில் தெரு ஆகிய பகுதிகளில், காலை 9 மணி முதல் மதியம், 2 மணி வரை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும்.
கொரோனா தடுப்பூசி போடுவோர், தங்களது ஆதார் அடையாள அட்டை உடன் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.