/* */

திருவண்ணாமலையில் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி

திருவண்ணாமலையில் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி
X

மாவட்ட தீயணைப்பு அலுவலர் முரளி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பணியின்போது உயிர்நீத்த வீரர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. 

1944-ம் ஆண்டு மும்பை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட 66 தீயணைப்பு வீரர்கள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மும்பையில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர்நீத்த 66 தீயணைப்பு வீரர்கள் மற்றும் இந்தியா முழுவதும் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

மேலும் அந்த வாரம் தீத்தடுப்பு வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களில் மும்பையில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர்நீத்த மற்றும் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் முரளி தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பணியின்போது உயிர்நீத்த வீரர்களின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் திருவண்ணாமலை உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகன், நிலைய அலுவலர் கமால்பாஷா மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் ஜவ்வாதுமலை தீயணைப்பு நிலையத்திலும் பணியின்போது உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிலைய அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் மலர் வளையம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து தீத்தடுப்பு வாரத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இதில் தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 April 2022 5:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை