/* */

அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல்

திருவண்ணாமலையில் 35 கிலோ ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி  மீன்கள் பறிமுதல்
X

 மீன்கள் மொத்த விற்பனை கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள்.

திருவண்ணாமலை நகர பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களும், கெட்டு போன மீன்களும் விற்பனை செய்வதாக ஆட்சியருக்கு புகார்கள் வந்து உள்ளது.

இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் வேலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் கங்காதரன் தலைமையிலான அலுவலர்கள், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எழில்சிக்கயராஜா, சிவபாலன் ஆகியோருடன் திருவண்ணாமலை நகராட்சியில் தண்டராம்பட்டு சாலை மற்றும் திருக்கோவிலூர் சாலையில் செயல்பட்டு வரும் மீன்கள் மொத்த விற்பனை கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள், கெட்டு போன மீன்கள் உள்ளதா என்றும், மீன்கள் மீது பார்மலின் ஏதேனும் பயன்படுத்தப்படுகிறதா மற்றும் மீன் கடைகள் நடத்த உரிமம் பெறப்பட்டு உள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது. இதில் கெட்டுப்போன மீன்கள் 18 கிலோ, ஆப்பிரிக்கன் கெளுத்தி மின்கள் 35 கிலோ பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 3 Jun 2022 1:44 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!