/* */

சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்

சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தூய்மைப்படுத்திய தூய்மைப்பணியாளர்களின் உழைப்பு அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

HIGHLIGHTS

சுட்டெரிக்கும் வெயிலில் கிரிவலப் பாதை தூய்மைப் பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்
X

கிரிவலப் பாதையில் தூய்மை பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி கிரிவலம் நேற்று முன்தினம் அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி, நேற்று அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைந்தது. அதையொட்டி, கடந்த இரண்டு நாட்களாக திருவண்ணாமலை நகரம் விழாக்கோலமாக காட்சியளித்தது. தமிழ்நாடு மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுமார் 30 லட்சம் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர்.

இரண்டாவது நாளான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

கலெக்டர் வேண்டுகோள்

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கிரிவலப்பாதையையும், நகரையும் தூய்மையாக வைத்திருந்த ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டது. அதோடு, மக்கும் தன்மையில்லாத, சுற்றுச்சூழலுக்கு கேடுதரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேலும் அன்னதானம் வழங்குபவர்கள் அந்த இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.

ஆனாலும், கிரிவலப்பாதையில் குப்பை கழிவுகளும், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் என டன் கணக்கில் கடந்த இரண்டு நாட்களில் குவிந்தன. மேலும், அன்னதானம் வழங்க அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர்த்தும், வேறு சில இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

அன்னதானம் வழங்கும் தன்னார்வலர்கள், அந்த இடத்தை தூய்மைப்படுத்தி செல்ல வேண்டும் என நிபந்தனையுடன் அனுமதிக்கப்பட்டது. ஆனாலும், அன்னதானம் வழங்கிய இடங்களில் ஆயிரக்கணக்கான பாக்குமட்டை தட்டுகளும், வாழை இலைகளும் குவிந்திருந்தன.

குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மைப்பணியாளர்கள்

இந்நிலையில், இரண்டு நாட்கள் கிரிவலம் முடிந்த நிலையில், நேற்று காலையில் இருந்தே 1800 தூய்மைப்பணியாளர்கள், குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர். அகற்றப்பட்ட குப்பை கழிவுகளை 20 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள், மினி லாரிகளில் கொண்டுசென்று நகருக்கு வெளியே சேர்த்தனர்.

நேற்று 105 டிகிரி வெயில் சுட்டெரித்தது. அனல் காற்று வீசியது. சாலைகளில் நடந்து செல்ல முடியாதபடி தார் சாலை உருகியது. ஆனாலும், அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல், தூய்மைப்பணியாளர்கள் முழு வீச்சில் பணியில் ஈடுபட்டு கிரிவலப்பாதை மற்றும் தற்காலிக பஸ் நிலையங்கள், மாட வீதி உள்ளிட்ட பகுதிகளை தூய்மைப்படுத்தியது அனைவரது பாராட்டையும் பெற்றது.

மேலும், தொடர்ந்து தூய்மைப்பணியில் ஈடுபட்ட தூய்மைப்பணியாளர்களுக்கு, கலெக்டர் பாஸ்கர பாண்டியன், கூடுதல் கலெக்டர் ரிஷப், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் பிரியதர்ஷினி, நகராட்சி ஆணையாளர் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Updated On: 25 April 2024 2:03 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...