/* */

போளூரில் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றிய வருவாய்த்துறை அதிகாரிகள்

போளூர் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக போடப்பட்ட இரும்பு கேட்டை வருவாய்த்துறை அதிகாரிகள் அகற்றினார்கள்.

HIGHLIGHTS

போளூரில் ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றிய வருவாய்த்துறை அதிகாரிகள்
X

போளூரில் வட்டாட்சியர் சண்முகம் தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் இரும்பு கேட்டை அகற்றப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே கோரால்பாக்கம் கிராமத்தை சார்ந்த பழனி என்பவர் கரைப்பூண்டி கிராமத்தில் ஏரி கால்வாய் புறம்போக்கில் பொதுமக்களுக்கு இடையூறாக இரும்பு கேட் அமைத்திருந்தார்.

இதனால் பொதுமக்கள் ஏரிக்கால்வாயை கடந்து தங்களது நிலம் மற்றும் ஆடு மாடுகளை ஓட்டி செல்ல முடியாமல் இருந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமியிடம் புகார் மனு அளித்தனர். இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க போளூர் வட்டாட்சியர் சண்முகத்துக்கு கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் பேரில் வட்டாட்சியர் சண்முகம் தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் இரும்பு கேட்டை அகற்றினர்.

அப்போது மண்டல துணை தாசில்தார்கள், தட்சிணாமூர்த்தி, வட்ட துணை ஆய்வாளர் சரவணன், வருவாய் ஆய்வாளர் பாரதி, கிராம நிர்வாக அலுவலர் அபிமன்னன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உடனிருந்தனர்.

Updated On: 26 Aug 2022 10:54 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  3. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  4. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  5. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  6. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  7. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  9. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  10. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?