/* */

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிப்பவர்கள் காவல்துறையினர்: எ.வ.வேலு

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு காவல்துறை பெரும் பங்கு வகிக்கிறது என அமைச்சர் வேலு கூறினார்.

HIGHLIGHTS

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிப்பவர்கள் காவல்துறையினர்: எ.வ.வேலு
X

புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் வேலு.

திருவண்ணாமலை-செங்கம் சாலை சந்திப்புப் பகுதியில், கிரிவலப்பாதையில் உள்ள ஆணாய்பிறந்தான் ஊராட்சியில், திருவண்ணாமலை மேற்கு காவல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு, தமிழக காவல் துறையின் வடக்கு மண்டலத் தலைவா் கண்ணன் தலைமை வகித்தாா். வேலூா் சரக காவல்துறை துணைத் தலைவா் முத்துசாமி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் முருகேஷ், காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழக நெடுஞ்சாலை, பொதுப்பணி, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மேற்கு காவல் நிலையத்தை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து அவர் மேற்கு காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்ட அமைச்சா், ரோந்துப் பணிக்காக ரூ.24 லட்சம் மதிப்பில் 12 இரு சக்கர வாகனங்களை தொடங்கிவைத்தாா்.

தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:- இந்தியாவில் மற்ற மாநிலங்களில் உள்ள காவல்துறையை விட தமிழக காவல்துறையினர் வெகு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

முதல்-அமைச்சரின் கீழ் உள்ள காவல்துறையில் 1305 சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையங்கள், 47 ரெயில்வே போலீஸ் நிலையங்கள், 227 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள், 220 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் என்ற அடிப்படையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 39 சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்கள், 7 அனைத்து மகளிா் காவல் நிலையங்கள், ஒரு குற்றவியல் காவல் நிலையம், 3 போக்குவரத்துக் காவல் நிலையங்கள், 4 மதுவிலக்கு அமலாக்கத் துறை காவல் நிலையங்கள் என மொத்தம் 54 காவல் நிலையங்கள் இயங்கி வருகின்றன.

ஆன்மிக பெருமக்கள் அதிகளவில் வந்து செல்லும் ஊர் திருவண்ணாமலை. குறிப்பாக கிரிவலப்பாதையில் 500-க்கும் மேற்பட்ட சாதுக்கள் உள்ளனர். சில சமயங்களில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பிரச்னைகள் இருப்பதாலும், கிரிவலம் வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கூடுதலாக போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் முதல்-அமைச்சரிடம் அனுமதி பெறப்பட்டு உள்ளது. ஏற்கனவே கருணாநிதி ஆட்சி காலத்தில் கிழக்கு போலீஸ் நிலையம் கொண்டு வரப்பட்டது. அதனைத்தொடர்ந்து தற்போது மேற்கு போலீஸ் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இங்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்கள் என 28 பேருடன் செயல்படும்.

சட்டம்-ஒழுங்கு சரியாக இருந்தால் தான் பொருளாதாரம் வளரும். வெளிநாடுகள், அண்டை மாநிலங்களில் இருப்பவா்கள் இங்கு வந்து தொழில் தொடங்க வேண்டும் என்றால் சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும். சட்டம்-ஒழுங்கு சரியாக இருந்தால் தான் வணிக நிறுவனங்கள் தமிழகத்தைத் தேடி வரும். வேலையில்லா திண்டாட்டமும் ஒழியும். நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு காவல்துறை பெரும் பங்கு வகிக்கிறது.

தமிழகத்தின் காவல்துறை தலைவராக இருந்த சைலேந்திரபாபுவை தமிழ்நாடு சர்வீஸ் கமிஷனுக்கு தலைவராக போடுவது காவல்துறைக்கு பெருமை சேர்க்கக் கூடிய ஒன்றாகும். ஆனால் அவரை தமிழ்நாடு சர்வீஸ் கமிஷனுக்கு தலைவராக தமிழக அரசு பரிந்துரை செய்ததை கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பி உள்ளார். இதனை சட்ட ரீதியாக சந்திப்போம்.

தி.மு.க.வை பொருத்தவரையில் உரிமைக்கு குரல் கொடுப்போம். உறவுக்கு கை கொடுப்போம். உரிமை என்று வரும்போது குரல் கொடுக்கத் தான் செய்வோம். நீட் தேர்வு என்பது எங்களுடைய உரிமைக்காக நாங்கள் போராடுகிறோம் என்றாா்.

நிகழ்ச்சியில் அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கிரி, சரவணன், ஜோதி. அம்பேத்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, மாநில தடகள சங்கத் துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதிசீனிவாசன், நகரமன்ற தலைவர் நிர்மலாவேல்மாறன், ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், உள்பட துணை காவல் கண்காணிப்பாளா்கள், அரசு அலுவலர்கள், போலீசார், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Aug 2023 4:59 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!