/* */

கூட்டுறவு சங்க கடன்: விடிவெள்ளி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை மனு

கூட்டுறவு கடனை ரொக்கமாக கட்ட வேண்டும் என கூட்டுறவு சங்கங்கள் வற்புறுத்துவதாக விடிவெள்ளி விவசாயிகள் நலச்சங்கம் கலெக்டரிடம் மனு

HIGHLIGHTS

கூட்டுறவு சங்க கடன்: விடிவெள்ளி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை மனு
X

விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் கலெக்டர் முருகேஷிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட விடிவெள்ளி விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் முருகேஷிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

வேலப்பாடி, புனலப்பாடி, கல்லேரிப்பட்டு, விளை, புதுப்பட்டு, நெசல், விளைசித்தேதி, வடுகசாத்து, தெள்ளூர் ஆகிய ஊராட்சிகள் சேர்ந்து விடிவெள்ளி விவசாய சங்க உறுப்பினர்கள் கடந்த ஆண்டுகளில் கூட்டுறவு சங்கத்தில் கடனைப்பெற்று புதுப்பித்து வருகிறோம். தற்போது பயிர் சாகுபடி சேதமான நிலையில் கடனை ரொக்கமாக கட்டுமாறு சங்கத்தின் மூலம் வற்புறுத்தி வருகின்றனர்.

கொரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக பாதித்து வந்த நிலையிலும், அதனை தொடர்ந்து வரலாறு காணாத மழை பெய்து அதிக அளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், விவசாயிகளின் கூட்டுறவு கடனை ரொக்கமாக கட்ட வேண்டும் என கூட்டுறவு சங்கங்கள் கட்டாயப்படுத்தியும், வற்புறுத்தியும் வசூல் செய்வது விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளுகின்றது.

எனவே இந்த நிலைபாட்டினை மாற்றி தற்போது உள்ள பாதிப்பான நேரத்தில், புதிய நடைமுறைகளின்படி ரொக்கமாக கடனை கட்டி புதுப்பிப்பதை தவிர்த்து சிட்டா, அடங்கல் மட்டும் பெற்று விவசாயிகளின் நலனை காக்கும்படியும் கேட்டு கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 15 Dec 2021 6:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  3. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  4. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  8. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  9. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...