/* */

திறன் மேம்பாடு வேலைவாய்ப்பு மற்றும் சந்தைப் போக்குகள் குறித்த கருத்தரங்கம்

அருணை பொறியியல் கல்லூரியில் திறன் மேம்பாடு வேலைவாய்ப்பு மற்றும் சந்தைப் போக்குகள் என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது

HIGHLIGHTS

திறன் மேம்பாடு வேலைவாய்ப்பு மற்றும் சந்தைப் போக்குகள் குறித்த கருத்தரங்கம்
X

கருத்தரங்கில் உரையாற்றும் தொழில் வளர்ச்சி மையம் துணை இயக்குனர் கார்த்திகேயன் சிவசண்முகம்

திருவண்ணாமலையில் அருணை பொறியியல் கல்லூரியின் சார்பில் இன்று திறன் மேம்பாட்டு, வேலைவாய்ப்பு மற்றும் சந்தைப் போக்குகள் என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

இவ் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தொழில் வளர்ச்சி மையம் துணை இயக்குனர் கார்த்திகேயன் சிவசண்முகம், கலந்துகொண்டு உரையாற்றும்போது, கோடிக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு தரும் இந்திய தகவல் தொழில்நுட்ப துறை வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த தொழில் தற்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2025 ஆம் ஆண்டில் அதிகமாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தொற்று நோய்க்கு பிறகு வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் இந்தியாவின் முதன்மையான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு முற்றிலும் புதிய வாய்ப்புகளை திறந்துவிட்டன, விரைவான தொழில்நுட்ப மாற்றம் தொழில் துறையின் வளர்ச்சிக்கு உதவும், அதே வேலையில் நீங்கள் தொழிலில் ஒரு தொழிலை உருவாக்க விரும்பினால் புதிய இடங்களில் வளர்ச்சியும் அவசியமாகிறது என்று கூறினார்.

தொழில் வளர்ச்சி மையம் தஇணை இயக்குனர் முனைவர் மோகனகிருஷ்ணன் பேசும்போது, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்ற விரும்பினால் ஒரு நல்ல எதிர்காலம் உள்ளது. ஐடி துறையில் எதிர்காலம் பாதுகாப்பானது. அதற்கு தேவையான தொழில் துறை நிபுணத்துவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். எனக் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் விஐடி பேராசிரியர் முனைவர் சுபத்ரா தேவி சைபர் பாதுகாப்பு, ஊடுருவல் சோதனை, பாதுகாப்பு , தணிக்கை உள்கட்டமைப்பு, கிளவுட் ஸ்டோரேஜ், நெட்வொர்க்கிங், சந்தையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இவ்விழாவிற்கு கல்லூரியின் துணை தலைவர் எ. வ. குமரன், பதிவாளர் முனைவர் சத்யசீலன் , கல்லூரி முதல்வர், முனைவர் ரவிச்சந்திரன், துறைத்தலைவர் முனைவர் ரவிச்சந்திரன், முதலாமாண்டு மாணவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Dec 2021 3:06 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  3. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  4. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  5. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  6. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  7. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  8. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  9. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  10. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...