/* */

விநாயகர் சிலைகள் ஊர்வலம்: காவல்துறையினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரில் காவல்துறை சார்பில் கொடி அணிவகுப்பு மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது

HIGHLIGHTS

விநாயகர் சிலைகள் ஊர்வலம்: காவல்துறையினர் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
X

மாவட்ட போலீஸ் எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பங்கேற்ற காவல்துறையினரின் அணிவகுப்பு ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை நகரில் உள்ள காந்தி சிலை அருகே 500க்கும் மேற்பட்ட பங்கேற்ற காவல்துறையினரின் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.

இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இந்த அணிவகுப்பு ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளில் சென்று, விநாயகர் சிலையை கரைக்க உள்ள தாமரை குளம் அருகே நிறைவடைந்தது.

விநாயகர் சதுர்த்தி விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து 3-வது நாளான வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தண்டராம்பட்டு சாலையில் உள்ள தாமரைக் குளத்தில் கரைக்கப்படும்.

பொதுமக்கள் எந்தவித அச்சமும் இன்றி விநாயகர் சிலை ஊர்வலத்தில் பங்கேற்கலாம் என்பதை வலியுறுத்தி துப்பாக்கி ஏந்திய போலீசாரின் கொடி அணிவகுப்பு திருவண்ணாமலையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய நகர் பகுதியில் உள்ள முக்கிய இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதனால் அந்த பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாதவாறு மாவட்ட காவல்துறை சார்பில் ஒவ்வொரு விநாயகர் சிலை அருகேயும் ஒரு காவலர் என பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட உள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை நகர் பகுதியில் வைக்கப்படும் விநாயகர் சிலை 10 அடிகள் உயரம் மட்டும் தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா நிறைவடைந்து, மூன்றாவது நாள் அன்று திருவண்ணாமலை நகரில் உள்ள காந்தி சிலையிலிருந்து அனைத்து விநாயகர் சிலைகளும் டிராக்டர்கள் மூலம் காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் சென்று தாமரை குளத்தில் கரைக்கப்பட உள்ளன

Updated On: 31 Aug 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...