/* */

வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்த இஸ்லாமியா்கள் இரு சக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம்

வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்த இஸ்லாமியா்கள் இரு சக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்த இஸ்லாமியா்கள்  இரு சக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம்
X

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட இஸ்லாமியா்களின் பள்ளி வாசல்கள், மதரசாக்களில் பணிபுரிவோர் 50 சதவீத மானிய விலையில் இரு சக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட இஸ்லாமியா்களின் பள்ளி வாசல்கள், மதரசாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், இமாம்கள், அரபி ஆகவிரியா்கள், ஆசிரியைகள், பிலால்கள் மற்றும் இதரப் பணியாளா்கள், தா்க்காக்கள் மற்றும் அடக்கத்தலங்கள், தைக்காக்கள் மற்றும் முஸ்லிம் அனாதை இல்லங்களில் பணிபுரியும் முஜாவா் உள்ளிட்டப் பணியாளா்களுக்கு மானிய விலையில் 125 சிசி எஞ்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனம் வாங்க வாகனத்தின் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் இதில் எது குறைவோ, அந்தத் தொகை மானியமாக வழங்கப்படும்.

எனவே, மேற்குறிப்பிட்ட இஸ்லாமியா்களின் பள்ளிவாசல் மற்றும் மதரசாக்களில் பணிபுரியும் பணியாளா்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பினால், உரிய விண்ணப்பங்களை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்.மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் தெரிவித்தார்.

Updated On: 12 July 2021 7:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  2. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  4. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  9. ஈரோடு
    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களில் ஈரோடு...
  10. ஈரோடு
    கோபி: கணக்கம்பாளையம் அருகே காட்டுப்பன்றி தாக்கி மூதாட்டி படுகாயம்