/* */

காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு

நேற்று முதல் தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் வாகன ஓட்டிகள் சிறிது வெப்ப தாக்கத்தை தவிர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
X

காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் காஞ்சிபுரம் இரட்டை மண்டபம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிழல் பந்தல்

சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கோடை வெயிலில் தாக்கத்தை குறைக்க சிக்னல் சந்திப்புகளில் நிழல் பந்தல் அமைப்பு. நிழல் பந்தல் அமைத்துள்ள போக்குவரத்து போலீசாரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கோடை காலம் தொடங்கி கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து பகல் நேரங்களில் வெப்ப அலை வீசுகிறது.வெப்ப அலை வீசுவதும் காரணமாக பொதுமக்கள் காலை 12 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் வரவேண்டாம் என தமிழக அரசும்,மாவட்ட நிர்வாகங்களும்,நாள்தோறும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோடை வெப்பம் 108 டிகிரி வரை அதிகரித்து வரும் நிலையில், சாலை சிக்னல்களில் பணியில் உள்ள காஞ்சிபுரம் போக்குவரத்து போலீசார், பொதுமக்களுக்கு நீர்மோர், தண்ணீர், உள்ளிட்டவர்களை நாள்தோறும் வழங்கி வருகிறது.

தற்பொழுது அதற்கு ஒரு படி மேலே போய் காஞ்சிபுரம் நகரின் முக்கிய பகுதியான பஸ் நிலையம் அருகே உள்ள இரட்டை மண்டபம் சிக்னல் சந்திப்பில் சாலையில் நின்று செல்லும் வாகன ஓட்டிகளுக்கு கோடை வெயிலின் வெப்பம் தாக்காமல் இருக்க நிழற்பந்தல் அமைத்து கொடுத்துள்ளனர்.

நிழற்பந்தல் அமைத்துள்ளதின் காரணமாக சிக்னல் விழுவதால் சாலையில் நின்று செல்லும் வாகன ஓட்டிகள் சிறிது நேரம் நிழலின் அருமையை அனுபவித்து செல்கின்றனர்.

வாகன ஓட்டுகளுக்காக போக்குவரத்து போலீசார் நிழற்பந்தல் அமைத்துள்ள செயல் பொது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதோடு, போக்குவரத்து போலீசாரின் செயலுக்கு பொதுமக்கள் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளனர்.

Updated On: 6 May 2024 11:22 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  7. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  8. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்
  10. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...