Begin typing your search above and press return to search.
அரசு பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு
திருவண்ணமலையில் அரசு பள்ளியில் புதிய கட்டடங்கள் திறந்துவைத்து மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வேலு வழங்கினார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை- நல்லவன்பாளையம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு மூலம் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தை அமைச்சர் எ வ.வேலு திறந்து வைத்தார்..
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு நல உதவிகள் வழங்கி, கொரோனா நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள ஆலோசனைகளை கூறினார்.
நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் கம்பன், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர் சரவணன், மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.