திருவண்ணாமலையில் இன்று 3 கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா
Maha Kumbhabhishekam - திருவண்ணாமலையில் இன்று ஒரே நாளில் 3 கோயில்களில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது
HIGHLIGHTS
Maha Kumbhabhishekam -திருவண்ணாமலையில் உள்ள பழமையான கோயில்களில் காமாட்சி அம்மன் கோயிலும் ஒன்று. அருணாச்சலேஸ்வரர் கோயில் அருகில் திருமஞ்சன கோபுர வீதியில் அமைந்துள்ள இக்கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று இன்று காலை மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த 2 ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்று இன்று காலை மகா கும்பாபிஷேக விழா அகில பாரதிய விஸ்வகர்ம ஜகத்குரு சீனந்தல் மடாலயம் 65 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீ சிவராஜ ஞானச்சாரிய குரு சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணி மற்றும் கும்பாபிஷேக உபயோதாரர்கள், கோயில் இணை ஆணையர் அசோக்குமார், துணை ஆணையர் குமரேசன், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் வசந்தி, திருப்பணி குழு ஒருங்கிணைப்பாளர் ஆடிட்டர் கோபிநாத் ஆகியோர் செய்திருந்தனர்.
இதே போல் திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் உள்ள சொர்ணாம்பிகை சமேத தொண்டரீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கடந்த இரண்டாம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கிய யாகசாலை பூஜைகள் இன்று காலை நிறைவு பெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சொர்ணாம்பிகை சமேததொண்டரீஸ்வரர் , மூலவர் மற்றும் உற்சவமூர்த்தி களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் கும்பாபிஷேகம், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க இன்று காலை விமரிசையாக நடைபெற்றது.காமாட்சி அம்மன் திருக்கோயில் தொண்டரீஸ்வரர் திருக்கோயில்களில் இன்று இரவு சுவாமி திருவீதி உலா நடைபெறும்.இந்த கும்பாபிஷேக விழாக்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2