நேஷனல் ஹெரால்ட் வழக்கு: அயர்ந்து போன அதிகாரிகள், அசையாத ராகுல்

National Herald Case Latest News -அமலாக்கத்துறை விசாரணையில் தனது பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையின் ரகசியம் குறித்து ராகுல்காந்தி விளக்கம் அளித்துள்ளார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நேஷனல் ஹெரால்ட் வழக்கு: அயர்ந்து போன அதிகாரிகள், அசையாத ராகுல்
X

ராகுல்காந்தி

National Herald Case Latest News -அமலாக்கத்துறை விசாரணை குறித்து முதன்முறையாக கேள்வி எழுப்பியதில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, இது போன்ற நீண்ட விசாரணைகளை கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்களின் பலம் காரணமாக நீண்ட நேரம் தாங்கிக்கொண்டு இருக்க முடியும். இருப்பினும், அவரது பொறுமை மற்றும் சகிப்புத்தன்மையின் ரகசியத்திற்கு காரணம் விபாசனா என கூறினார்.

கட்சி தலைமையகத்தில் காங்கிரஸ் தொண்டர்களிடம் பேசிய ராகுல், 12x12 அடி அளவுள்ள சிறிய அறையில் 3 அதிகாரிகள் 10-11 மணி நேரம் விசாரித்ததாகவும், அதிகம் அசையாமல் பொறுமையாக பதில் அளித்ததாகவும், இது விசாரித்த அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாகவும் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், அதிகாரிகள் விசாரணைக்கு வந்து போவார்கள். ஒருவேளை அவர்கள் மேலதிகாரிகளிடம் ஆலோசனைகளை பெற வேண்டியிருக்கலாம். ஆனால், 11 மணிநேரம் விசாரித்த பிறகும் நான் நகரவில்லை. பின்னர் அவர்கள் சோர்வாக இருப்பதாக என்னிடம் சொன்னார்கள். என்னுடைய சகிப்புத்தன்மையின் ரகசியம் என்ன என்று கேட்டார்கள். உண்மையான காரணத்தை அவர்களிடம் சொல்லக்கூடாது என்று நினைத்தேன். நான் விபாசனா பயிற்சி செய்கிறேன் என்று அவர்களிடம் சொன்னேன், அதைச் செய்யும்போது ஒருவர் 6-8 மணி நேரம் உட்கார வேண்டும், அதனால் எனக்கு அது பழக்கமாகிவிட்டது. ஆனால் அந்த அறையில் நான் மட்டும் இல்லை என்பதே உண்மை; ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களும், தலைவர்களும் என்னுடன் இருந்தார்கள் என்றார்

விபாசனா தியானம் நமது நாட்டின் தொன்றுதொட்ட தியான வழிமுறைகளில் ஒன்றாகும். விபாசனா என்ற சொல்லுக்கு 'உள்ளதை உள்ளபடி பார்த்தல்' என்று பொருள்.

2015-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பு ராகுல் காணாமல் போனது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. விபாசனா படிப்பில் கலந்து கொள்வதற்காக மியான்மர் சென்றிருந்தார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 23 Jun 2022 9:19 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    மின்சார ரெயில்களில் ஏ.சி. பெட்டிகள்: தெற்கு ரயில்வே முடிவு
  2. இந்தியா
    மாணவர்களின் தற்கொலைகளை தடுக்கும் நலக்குழு: வழிகாட்டுதல்களை வெளியிட்டது...
  3. இந்தியா
    சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்: 23 ராணுவ வீரர்கள் மாயம்
  4. தமிழ்நாடு
    இணையதள சேவை பாதிப்பு: சென்னை விமான நிலையத்தில் விமானங்கள்...
  5. இந்தியா
    இந்திய மாணவா்களுக்கு குறைந்த விலையில் மடிக்கணினி
  6. சோழவந்தான்
    வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில், ரத்த தான முகாம்:
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  8. திருப்பூர்
    பில்டா் காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கடனுதவி; கலெக்டர் தகவல்
  9. தமிழ்நாடு
    திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழா
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்