100 சதவீதம் தடுப்பூசி செலுத்த திருவண்ணாமலை நகராட்சி முயற்சி மேற்கொண்டுவருகிறது
விரைவில் 100 சதவீத தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்கள் வசிக்கின்ற நகராட்சியாக திருவண்ணாமலை இருக்கும் என நகராட்சி ஆணையர் நம்பிக்கை
HIGHLIGHTS
கொரோனா தடுப்பூசி மட்டுமே தொற்று பரவுவதை தடுப்பதற்கான ஆயுதம் என அரசு முடிவு எடுத்ததை தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை நகராட்சி சார்பில் பணிகள் முடுக்கிவிடப்பட்டன . மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு வீடு வீடாக சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் பற்றி கணக்கெடுக்க துவக்கி துவங்கியுள்ளனர். திருவண்ணாமலை நகராட்சி சார்பில் எங்கெங்கு தடுப்பூசி போடப்படுகிறது என ஒலிபெருக்கிகள் மூலமாக நகர் முழுவதும் அறிவிப்புகள் செய்யப்படுகின்றன.
திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினரான பொதுப்பணித்துறை அமைச்சர் முயற்சியால் தொடர்ந்து தட்டுப்பாடுகள் இல்லாமல் திருவண்ணாமலை நகராட்சிக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுவதற்கான முயற்சிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது. விரைவில் 100 சதவீத தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்கள் வசிக்கின்ற நகராட்சியாக திருவண்ணாமலை அறிவிக்கப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.