Begin typing your search above and press return to search.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி பதாகைகள் கையில் ஏந்தி விழிப்புணர்வு
Latest Chess News Update-மாவட்ட ஆட்சியர் தலைமையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
HIGHLIGHTS
Latest Chess News Update- மாமல்லபுரத்தில் 44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி திருவண்ணாமலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செஸ் ஒலிம்பியாட் பதாகையினை மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ், அரசு அலுவலர்களுடன் கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கணேசன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அலுவலர் நான்சி, பொது மேலாளர் ரவி, வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2