/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. கலசபாக்கத்தில் அதிகபட்சமாக 123.6 மிமீ மழை பதிவாகியுள்ளது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் பலத்த மழை
X

திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் இருந்து அதிகாலை 5 மணி வரை பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது..

ஆரணி நகரிலும் மற்றும் சுற்றுவட்டார பகுதியிலும் பெய்த மழையால் ஆரணி கோட்டை வடக்கு பகுதியில் வசித்து வரும் கூலி தொழிலாளி ராஜா என்பவரது வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. இதில் ராஜா மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

வாணாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தொடர் மழையால் குங்கிலிய நத்தம் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டியது. மேலும் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறுகிறது. .

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக கலசபாக்கத்தில் 123.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. மற்ற பகுதியில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு,

செய்யாறு- 65, போளூர்- 56.4, செங்கம்- 47.4, சேத்துப்பட்டு- 37.6, ஆரணி மற்றும் திருவண்ணாமலை- 32, கீழ்பென்னாத்தூர்- 20, தண்டராம்பட்டு- 10.4, ஜமுனாமரத்தூர்- 7, வெம்பாக்கம்- 2

Updated On: 3 Sep 2021 6:57 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  3. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  7. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...
  8. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடைக் காலத்துல ஈஸியா எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
  10. தொண்டாமுத்தூர்
    நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது :...