அருணை மருத்துவக் கல்லூரி சார்பில் இலவச மருத்துவ முகாம்
தீபத் திருவிழாவை முன்னிட்டு அருணை மருத்துவக் கல்லூரி சார்பில் மூன்று நாட்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது
HIGHLIGHTS
திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் தீபத் திருவிழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாமினை இன்று தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் அனைவரையும் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் கம்பன் வரவேற்றார். அப்போது அவர் கூறுகையில் இந்த இலவச மருத்துவ முகாமில் நீரிழிவுநோய், கண், மூக்கு, காது, தொண்டை, பிரச்சினைகளுக்கும், மேலும் மூட்டு வலி, பல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் இந்த இலவச முகாமில் பார்க்கப்படும் எனவும், இந்த இலவச முகாம் இன்று, நாளை, நாளை மறுதினம் 3 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது . பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இவ்விழாவில் திருவண்ணாமலை நகர மன்ற துணைத் தலைவர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், அருணை மருத்துவ கல்லூரி பேராசிரியர் மருத்துவர் குப்புராஜ், கல்லூரி முதல்வர், முனைவர் சேஷாத்ரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.