/* */

திருவண்ணாமலை மாவட்ட மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா: அமைச்சர் பங்கேற்பு

Free Cycle Distribution -உலகில் இரண்டு புனிதமான இடங்கள் உள்ளது ஒன்று தாயின் கருவறை மற்றொன்று ஆசிரியரின் வகுப்பறை என ஆசிரியர் தின விழாவில் அமைச்சர் வேலு தெரிவித்தார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா: அமைச்சர் பங்கேற்பு
X

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார்.

Free Cycle Distribution -அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் உலமாக்களுக்கு சைக்கிள்கள் வழங்கும் விழா திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பள்ளி கல்வித்துறை ஆகியவை இணைந்து விழாவை நடத்தின.

விழாவுக்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் பிச்சாண்டி, அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கல்வித்துறை அலுவலர் கணேஷ்மூர்த்தி வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் உலமாக்களுக்கும் சைக்கிள்களை வழங்கினார்.

மேலும், 2014, 2018-ஆம் ஆண்டுகளில் திருப்பதி வனப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இறந்தவா்களின் வாரிசுதாரா்கள் 4 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகள், சத்துணவு மையங்களில் பணியின்போதே இறந்தவா்களின் வாரிசுகள் 7 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சா் வழங்கினாா். ஆசிரியா் தினத்தையொட்டி நகராட்சி மகளிா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கு சால்வைகளை வழங்கி கெளரவித்தாா்.

அதை தொடர்ந்து அவர் பேசியதாவது:-

உலகில் 2 புனிதமான இடங்கள் உள்ளது. ஒன்று தாயின் கருவறை, மற்றொன்று ஆசிரியரின் வகுப்பறை. தாயின் கருவறையில் உயிர் கொடுக்கப்படுகிறது. ஆசிரியர்கள் இறைவனுக்கு சமமாக பார்க்கப்படுகிறார்கள். ஆசிரியர்களின் சேவைக்கும், பொறுமைக்கும், தியாக மனப்பான்மைக்கும் மரியாதை செலுத்துகின்ற தினமாக ஆசிரியர் தினம் பார்க்கப்படுகிறது.

திராவிட மாடல் ஆட்சியில் கொடுக்கப்படுவது இலவசமல்ல. சமூக நீதியை உருவாக்குவதற்காக இல்லாதவர்களுக்கு கொடுக்கப்படும் அரசின் உதவி. இலவசங்களை சிலர் கொச்சைப்படுத்தி பேசி வருகின்றனர்.

அனைவரையும் வளர்ச்சி பாதையில் கொண்டு வந்து ஒரே இடத்திற்கு கொண்டு வருவதை இலக்காக கொண்டு தான் இலவசங்கள் வழங்கப்படுகிறது. சமூகநீதியும், சமத்துவமும் வளர்வதற்காக தான் இலவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது. சமூக நீதியும் சமத்துவத்தையும் உருவாக்குவதற்காக தான் குடும்ப பொருளாதாரத்தை கணக்கிட்டு இலவசங்கள் வழங்கப்படுகிறது.

மேலும் இந்த நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அதிக அளவில் மாணவிகள் சேர்ந்து உள்ளார்கள் அவர்களுக்கு இடவசதி இல்லை புதிய வகுப்பறைகள் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் அரசு நிதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்தும் இந்த ஆண்டுக்குள் புதிய வகுப்பறைகள் கட்டித் தரப்படும் என்று உறுதி கூறுகிறேன் .

இந்நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்துள்ள பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன், இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 148 அரசு பள்ளிகள், 19 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் என 167 பள்ளிகளை சேர்ந்த 12 ஆயிரத்து 665 மாணவர்கள், 13 ஆயிரத்து 66 மாணவிகள் என 25 ஆயிரத்து 731 மாணவ-மாணவிகளுக்கும், 503 உலமாக்களுக்கும் என 26 ஆயிரத்து 234 பயனாளிகளுக்கு ரூ.13 கோடியே 33 லட்சத்து 56 ஆயிரத்து 147 மதிப்பில் சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குமரன், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் அன்பழகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், துணைத்தலைவர் பாரதிராமஜெயம், நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகரச் செயலாளர் கார்த்திவேல்மாறன், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 6 Sep 2022 6:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை