/* */

அனுமதியின்றி மலை ஏறியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

திருவண்ணாமலையில் அனுமதியின்றி மலை ஏறியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

அனுமதியின்றி மலை ஏறியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
X

திருவண்ணாமலை மலை உச்சி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலையில் அனுமதியின்றி சிலர் செல்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருவண்ணாமலை வனச்சரக அலுவலர் ஸ்ரீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது சென்னையை சேர்ந்த வெற்றிவேல் ராஜன் (வயது 69) என்பவர் அண்ணாமலையார் மலை உச்சி மீது அத்துமீறி திருவண்ணாமலையை சேர்ந்த ஒருவரின் உதவியுடன் ஏறியது தெரியவந்தது. இதையடுத்து வெற்றிவேல் ராஜனுக்கு வனத்துறையினர் மலை மீது ஏறிய குற்றத்திற்காக ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரித்து விடுவித்தனர்.

மேலும் வனத்துறையினர் கூறுகையில், அண்ணாமலையார் மலை உச்சி மீது அத்துமீறி ஏறுவதும், திருவண்ணாமலை உள்வட்ட பாதைகளில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதும் சட்டபடி குற்றமாகும். மேலும் இந்த தவறை செய்பவர்களுக்கு வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றனர்.

Updated On: 26 Jan 2022 6:25 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  2. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  3. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  4. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  7. வீடியோ
    சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை !Congress எண்ணம் பலிக்காது !...
  8. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  9. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  10. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...