/* */

திருவண்ணாமலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர்  ஆர்ப்பாட்டம்
X

திருவண்ணாமலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் திருவண்ணாமலை வட்டக்குழு சார்பில் பேருந்து நிலையம் அருகில் உள்ள அறிவொளி பூங்கா எதிரில் மக்கள் நாடாளுமன்றம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்கு போலீசார் அனுமதி அளிக்காததால் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். நகர செயலாளர் ஞானவேல் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளா்களாக மாநில துணை செயலாளர் வீரபாண்டியன், மாவட்ட செயலாளர் முத்தையன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் முறையீடுகளை ஏற்க மறுத்து விவாதமில்லாமல் மசோதாக்களை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பெகாசஸ் மூலம் ஒட்டுக் கேட்பு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை போன்றவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Aug 2021 6:49 AM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  4. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  7. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  8. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  9. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  10. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...