திருவண்ணாமலை மாவட்ட அரசு பள்ளிகளில் ஆட்சியர் முருகஷே் திடீர் ஆய்வு
School News in Tamil -திருவண்ணாமலை அரசு பள்ளிகள், ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
HIGHLIGHTS
School News in Tamil -திருவண்ணாமலை நகராட்சிக்குள்பட்ட கீழ்நாத்தூா் நகராட்சி தொடக்கப் பள்ளி, கீழ்நாத்தூா் உயா்நிலைப் பள்ளி ஆகியவற்றில் மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ் திடீா் ஆய்வில் ஈடுபட்டாா்
அப்போது, பள்ளி வகுப்பறைகள், பள்ளி வளாகம், விளையாட்டு மைதானம், பள்ளி சுற்றுப்புறம் ஆகியவற்றை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று ஆசிரியா்களிடம் அவா் அறிவுறுத்தினாா்.
அதன்பின் திருவண்ணாமலை நகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு முதல்- அமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்தும் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை நகராட்சி எல்லைக்குள்பட்ட கீழ்நாத்தூா் நியாய விலைக் கடையில் திடீா் ஆய்வில் ஈடுபட்டாா்அப்போது அங்கிருந்த பொது மக்களிடம் பொருட்கள் ஒழுங்காக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.
அங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசியின் தரத்தை பரிசோதித்தாா். ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி, வருவாய்க் கோட்டாட்சியா் வீ.வெற்றிவேல், வட்ட வழங்கல் அலுவலா் முருகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2